மாநிலங்களவை பாஜக தலைவராக இருந்து வந்தவர் தாவர்சந்த் கெஹ்லோட். இவர் அண்மையில் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் மாநிலங்களவையில் பாஜக தலைவர் பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் மாநிலங்களவை பாஜக தலைவராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தகம், ஜவுளி உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராக இருந்து வரும் பியூஷ் கோயல், கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.