PINARAYI VIJAYAN

இந்தியாவில் கரோனாபரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்துபல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில்கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துஅவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன் மகளுக்கு ஏற்கனவே கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.