Skip to main content

தங்கக்கடத்தல் வழக்கு குற்றப்பத்திரிகை; சிக்கலில் பினராயி விஜயன்...

Published on 13/10/2020 | Edited on 13/10/2020

 

pinarayi vijayan relationship with uae diplomat

 

இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதரைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பலமுறை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளதாகத் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

 

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்வப்னா கேரள அரசியல்வாதிகளுடனும் மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பழகியது தொடர்பான பல தகவல்கள் என்.ஐ.ஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.

 

இந்நிலையில், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதரைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பலமுறை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளதாகத் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாகக் கொச்சியில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முதல்வர் பினராயி விஜயன், 2017 ஆம் ஆண்டு பல முறை ஐக்கிய அரபு அமீரக தூதரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

 

மேலும், முதல்வர் அலுவலகத்தின் நடந்த இந்தச் சந்திப்புகளில், கேரள அரசின் முதன்மைச் செயலராகப் பணியாற்றிய எம்.சிவசங்கரை, கேரள அரசின் அதிகாரப்பூர்வ தொடர்பு நபராக, தூதரிடம் முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தியதாகவும் ஸ்வப்னா தெரிவித்துள்ளதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில், ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள கேரள முதல்வருக்கு இந்த குற்றப்பத்திரிகை மேலும் சிக்கலை அதிகப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலின் வரிசையில் வீணா விஜயன்; கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்கு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kerala CM Pinarayi Vijayan daughter filed a case against the Enforcement Directorate

கேரள முதல்வர் பிணராய் விஜயன் மகள் வீணா விஜயன் ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன் என்ற ஐடி நிறுவனத்தை நடத்திவருகிறார். கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி(சி.எம்.ஆர்.எல்) நிறுவனம் மூலம் வீணா விஜயனின் நிறுவனமான எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு  சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில்தான், சி.எம்.ஆர்.எல் நிறுவணம் வீணா விஜயனின்  ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’ நிறுவனத்திடம் சாப்ட்வேர் அப்டேட் செய்து தருவதற்காக தவணை தவணையாக ரூ.1.72 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்’  நிறுவணம் எந்த விதமான சாப்ட்வேர் அப்டேட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணத்தில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கவில்லை என்றாலும், எதற்காக வீணா விஜயன் நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது என்று கேள்வி எழுந்ததை தொடர்ந்து விசாரணை முடுக்கி விடப்பட்டது

இதனிடையே இதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் அமலாக்கத்துறைக்கு கொடுத்த்தாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில் பிணராயி விஜயன் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கவே அமலாக்கத்துறையை ஏவி கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டவர்களை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, கேரள முதல்வரின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இந்தியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான முதல் ஓடிடி தளம் அறிமுகம்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
CSpace India’s first government-owned OTT platform launched in Kerala

மலையாள திரையுலகம் தற்போது தன் மார்க்கெட்டை அதிகரித்து வருகிறது. சிறு பட்ஜெட்டில் எடுத்து பெரிய லாபத்தை ஈட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை தாண்டி தமிழிலும் பெரும் வரவேற்பை பெற்று, உலகம் முலுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் மம்மூட்டியின் பிரமயுகம் மற்றும் ப்ரேமலு உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இந்த நிலையில் கேரள அரசாங்கம் சி-ஸ்பேஸ் என்ற ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் உள்ள கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைத்துள்ளார். இந்தியாவில் அரசாங்கத்திற்கு சொந்தமான முதல் ஓடிடி தளமாக இது விளங்குகிறது. 

சி-ஸ்பேஸ் ஓடிடி தளம் மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் (KSFDC) நிர்வகிக்கப்படும் எனவும், மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஓடிடி தளத்தில், 35 திரைப்படங்கள், 6 ஆவணப்படங்கள் மற்றும் 1 குறும்படம் உட்பட 42 திரைப்படங்கள் தற்போது உள்ளது. இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பது 60 நிபுணர்களைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தைப் பார்க்க ரூ. 75 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.