நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகளை பெற்றுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்க நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தமாட்டோம் என கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் இன்று கூடிய கேரள சட்டசபை கூட்டத்தில், இந்த சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.
Show comments