ADVERTISEMENT
ADVERTISEMENT
டெல்லியில் நடைபெற்ற எரிசக்தித்துறை கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்த போதிலும் இந்தியாவின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய ஈரானுடன் எண்ணெய் இறக்குமதி தொடரும் என்று தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. ஆனால், இந்தியா நவம்பர் மாதத்திற்கான இறக்குமதியையும் உறுதி செய்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
Show comments