Skip to main content

வேலைக்குவராத பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வைரல் வீடியோ!!

Published on 06/07/2018 | Edited on 06/07/2018

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 5 நாட்கள் வேலைக்கு வராததால் ஆத்திரம் அடைந்த பெட்ரோல் பங்க் முதலாளி ஊழியரை கட்டிவைத்து அடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மத்திய பிரதேசத்தில் ஹோஷங்காபாத்தில் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைசெய்துவரும் ஒரு ஊழியர் ஒரு வாரத்திற்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். அதனை கண்டிக்க முதலாளி அந்த ஊழியரை பெட்ரோல் பங்கிலுள்ள ஒரு தூணில் கட்டிப்போட்டு கடுமையாக அடித்துள்ளார். அப்படி தாக்கும்பொழுது ஊழியர் தனக்கு காலில் அடிபட்டது எனவேதான் என்னால் வேலைக்கு வரமுடியவில்லை என விளக்கம் கூறுகிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தமால் அந்த முதலாளி அந்த ஊழியரை தாக்குக்கிறார்.

 

இந்த காட்சியை அருகிலுள்ள மற்ற ஊழியர் வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்த தாக்குதல் வீடியோ பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டிவைத்து சரமாரியாக அடித்த அந்த முதலாளி மற்றும் மேலும் ஒருவர் என இந்த தாக்குதல் தொடர்பாக மொத்தம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்