மும்பை ஆரே வனப்பகுதியிலுள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

people protest for aarey forest

Advertisment

Advertisment

மும்பையின் ஆரே காலனி பகுதியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள 2,700 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி, மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு அனுமதி அளித்துள்ளது. சுமார் 16 சதுர கிரோமேட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதியில் அண்மையில் மரம் வெட்டும் பணியை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரியும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, மரம் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. நள்ளிரவில் மரங்கள் வெட்டப்பட்டு வந்த சூழலில், பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பேர் மீது வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக 20 பேர் கைதும் செய்துள்ளனர். இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதியளிக்க கூடாது என பல திரைத்துறை பிரபலங்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்றும் போராட்டங்கள் நடைபெறலாம் என்பதால் ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இதனிடையே, அரே காலனி மக்களுக்கு ஊர்மிளா மடோன்கர், தியா மிர்சா, ஷ்ரத்தா கபூர், ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்ட பாலிவுட், பூஜா ஹெக்டே போன்ற பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கம் வாயிலாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.