delhi locals

டெல்லியில் மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராக, குடியரசுத் தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. விவசாயிகள் விதிகளைப் பின்பற்றாததே வன்முறைக்கு காரணம் என டெல்லி காவல்துறையும், இது விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானமத்திய அரசின்சதிஎன்று விவசாயசங்கத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இதுவரை இந்த வன்முறை காரணமாக20க்கும் மேற்பட்ட வழக்குககள் பதிவு செய்யப்பட்டு, விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கு எதிராகதிடீர் போராட்டம் வெடித்துள்ளது.தங்களை உள்ளூர் மக்கள் எனகூறிக்கொள்ளும் சிலர், சிங்குஎல்லையில் திரண்டு, அங்கிருக்கும் விவசாயிகள் வெளியேற வேண்டும் எனபோராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment