Skip to main content

'பெகாசஸ் ஸ்பைவேர்' மென்பொருள் குறித்து பார்ப்போம்!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Pegasus Spyware software issues in parliament

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உளவுப் பார்க்கப்பட்டதாக புயல் கிளம்பி இருக்கிறது. இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

 

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமம் ஸ்பைவேர் பெகாசஸ் என்ற மென்பொருளைத் தயாரித்துள்ளது. இதனை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். ஸ்பைவேர் என்பது ஒருவருக்கு தெரியாமல் அவரை வேவுப் பார்க்கக்கூடிய மென்பொருள். இந்த ஸ்பைவேர் ஒருவரது ஸ்மார்ட்ஃபோனில் ஒரு தொடுதலும் இல்லாமலே ஊடுருவி தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபோனில் இருக்கும் 'BUG' மூலம் பெகாசஸ் ஸ்பைவேர் உள்ளே நுழைந்து விடும் (அல்லது) இது காத்திருக்கும் லிங் எதையாவது ஒருவர் கிளிக் செய்வதன் மூலமும் உள்ளே நுழைந்து விடும். ஐ.ஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதள ஃபோனில் பெகாசஸ் ஸ்பைவேர் ஒட்டுக்கேட்கவும், மெசேஜ்களைப் படிக்கவும் முடியும். ஃபோன் கேமரா மற்றும் மைக்கை அவருக்கு தெரியாமலேயே இயக்கவும் முடியும். ஜி.பி.எஸ்.சை தானாகவே இயக்கி, நகர்வுகளைக் கண்காணிக்க முடியும். எண்ட் டூ எண்ட் என்க்ஸ்ரிப்ட் எனப்படும் குறியாக்கம் செய்த தகவலைக் கூட பெகாசஸ் பார்க்க முடியும்.

 

ஊடுருவ வேண்டிய செல்ஃபோனை அடையாளம் கண்டதும், இலக்கு உரிய நபரை தனது முயற்சிக்கு வரவழைக்க வலைத்தள இணைப்பை அனுப்புவர். குறிப்பிட்ட நபர் அந்த லிங்கை கிளிக் செய்ததும் அவரது ஃபோனில் பெகாசஸ் இன்ஸ்டால் ஆகிவிடும் (அல்லது) வாட்ஸ் ஆப் கால்களில் உள்ள 'BUG' வழியாகவும் ஊடுருவல் நடைபெறும். மிஸ்டுகால் அனுப்பியும் ஃபோனில் இன்ஸ்டால் செய்ய முடியும். அழைப்பு பட்டியலில் இருந்து அந்த எண் நீக்கப்படுவதால், அதுபற்றி பயனருக்கு நடந்த விஷயம் தெரியாது. பெகாசஸ் ஸ்பைவேர் புதிதல்ல. 2016- ல் ஐஃபோன் பயனர்களை இது குறி வைப்பதாகக் கூறப்பட்டது. 

 

பிறகு, 2019- ல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதை உளவு பார்க்க பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. ஆனால், அப்போது அரசால் அந்த தகவல் மறுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்கள், "சதித்திட்டம் தீட்டுபவர்களை உளவு பார்க்க மட்டுமே இந்த ஸ்பைவேர் உருவாக்கி நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. பெகாசஸ் மூலம் மனித உரிமை மீறல்களில் அரசுகள் ஈடுபடக்கூடாது என்ற உத்தரவாதம் பெறுவதாகக் கூறுகிறது" என்.எஸ்.ஓ.நிறுவனம் கூறுகிறது. 

 


  

   A

சார்ந்த செய்திகள்

Next Story

"உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீனின் உடலை மீட்க நடவடிக்கை"- பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு!

Published on 13/03/2022 | Edited on 13/03/2022

 

ukraine issues pm narendra modi discussion with union minister and officials

 

உக்ரைன் போர் சூழல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். 

 

இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை மற்றும் உலகளாவிய சூழல் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவுப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும். உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

Next Story

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தனித்துவிடப்பட்ட உக்ரைன்!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

russia and ukraine issues nato countries

 

ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. நேட்டோ நாடுகளை நம்பி போர் சூழலை எதிர்கொண்ட உக்ரைன் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளது. நேட்டோ படைகள் இதுவரை உக்ரைன் நாட்டிற்குள் நுழையாதது ஏன்? இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விரிவாக்கப் பார்ப்போம்.

 

நேட்டோவில் இணைய வேண்டும் என்ற உக்ரைனின் விருப்பம் தான் தற்போது நடந்து வரும் போருக்கு மூல காரணம். உக்ரைன் நேட்டோவில் இணைந்தால், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று நினைக்கும் ரஷ்யா, உக்ரைனை நேட்டோவில் இணைக்க மாட்டோம் என்று உறுதியளிக்க நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், அந்த உறுதியை அளிக்கவில்லை. எனவே, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு இது அவசியம் என்று கூறி ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. 

 

ஆனால், நேட்டோ படைகளால் உக்ரைனுக்கு எந்த உதவியையும் வழங்க முடியவில்லை. இதற்கு காரணம் நேட்டோவில் உள்ள சட்டப்பிரிவு 5. நேட்டோ அமைப்பின் முக்கிய நோக்கமே, இந்த சட்டப்பிரிவு 5 மூலமே நிறைவேறுகிறது. கடந்த 1949- ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டதே நேட்டோ என்றழைக்கப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்தக் கூட்டமைப்பு.  

russia and ukraine issues nato countries

இதில் மிக முக்கியமானது சட்டப்பிரிவு 5. உறுப்பு நாடுகள் ஏதேனும் ஒன்றுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ (அல்லது) தாக்கப்பட்டாலோ, மற்ற உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் மீதான தாக்குதல் என்று கருதிப் படைகளை அனுப்ப வேண்டும். ஆனால், இது உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். 

 

உக்ரைனைப் பொறுத்தவரை நேட்டோவுடன் நட்பு நாடு தானே தவிர, உறுப்பினர் நாடு அல்ல. எனவே, ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நேட்டோ, தனது சட்டப்பிரிவு 5-ஐ மீறி படைகளை அனுப்ப முடியாது. ஆனால் உக்ரைன் நாடு போலந்து,  ஹங்கேரி, சுலோவாகியா, ருமேனியா ஆகிய நேட்டோ நாடுகளுடன் எல்லையைப் பகிர்கிறது. ஒரு வேளை இந்த நாடுகள் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தினால், உடனடியாக நேட்டோ படைகள் பதிலடிக் கொடுக்கும். 

 

எனவே தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேட்டோ நாடுகள் இணைந்து 40,000 படைகளை ஐரோப்பாவில் தயார் நிலையில் வைத்திருக்கின்றனர். ஆனால், ரஷ்யா அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடாது என்று கூறப்படுகிறது.