கர்நாடகாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ்..? - காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

df

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரதுசெல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டு தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் மஜக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதாக அம்மாநில காங்கிரஸ் மூத்தத் தலைவர் பரமேஷ்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

karnataka Pegasus Spyware
இதையும் படியுங்கள்
Subscribe