Skip to main content

பெகாசஸ் மென்பொருளை விற்கும் நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளதா?  - மத்திய அரசு பதில்!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

 

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.

 

அதேபோல் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக  விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தநிலையில் பெகாசஸ் மென்பொருளை தயாரித்து விற்கும் 'என்.எஸ்.ஓ குரூப்' இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

 

nso

 

அதற்கு பதிலளித்துள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையமைச்சர், என்.எஸ்.ஓ குரூப்'பை தடை செய்ய எந்த திட்டமுமில்லை என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெகாசஸ் விவகாரம்; இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணைக் குழு!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

supreme court

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன.

 

இதற்கிடையே பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது. இதனைத்தொடர்ந்து பெகாசஸ் ஹேக்கிங் குறித்து விசாரித்த விசாரணை குழு, தற்போது உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளதோடு, விசாரணை முடிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளது.

 

இதனையடுத்து உச்சநீதிமன்றம், பெகாசஸ் வழக்கை நாளை மீண்டும் விசாரிக்க இருந்தநிலையில், தற்போது மத்திய அரசு வழக்கறிஞரின் கோரிக்கையையேற்று, வழக்கு விசாரணையை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

 

 

Next Story

இந்த பிரவுசரை அப்டேட் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம் - பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

microsoft edge

 

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரின் பழைய வெர்சன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரின் பழைய வெர்ஷன்களில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள், சைபர் தாக்குதலை அனுமதிக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க எட்ஜ் பிரவுசரை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55 இந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55-ல் புதிய பாதுகாப்பு அப்டேட்டுகளும், புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.