Skip to main content

"உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது" - உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் வரவேற்பு!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021


 

rahul gandhi

 

இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைப்பேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

 

இந்தநிலையில் இன்று பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான வல்லுநர் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது; கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, பெகாசஸ் பிரச்சனையை நாங்கள் எழுப்பினோம். இன்று உச்சநீதிமன்றம் தனது கருத்தைக் கூறி நாங்கள் சொல்வதை ஆதரித்துள்ளது.

 

நாங்கள் போராடினோம். ஆனால் பதில் கிடைக்கவில்லை. நாங்கள் பாராளுமன்றத்தை முடக்கினோம். அப்போதும் எங்களுக்கு பதில் கிடைக்கவில்லை. இப்போது எங்கள் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் கேள்விகள் அப்படியே இருக்கின்றன.

 

பெகாசஸ் பயன்பாட்டை அங்கீகரித்தவர் யார்? பெகாசஸை வாங்கியவர் யார்? பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார் யார் தாக்கப்பட்டார்கள்? வேறு எந்த நாடும் நமது மக்களை பற்றிய தரவுகளை வைத்துள்ளதா? அவர்களிடம் என்னென்ன தகவல்கள் உள்ளன ?. இவைதான் நாங்கள் எழுப்பிய அடிப்படை கேள்விகள்.

 

பெகாசஸ் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரிய நடவடிக்கை. இதன்மூலம் உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கண்டிப்பாக பாஜக அந்த விவாதத்தை விரும்பாது. ஆனால் நாங்கள் விவாதம் நடத்த வலியுறுத்துவோம். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் அதை முன்னெடுத்துச் செல்லும்.ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அழுத்தம் கொடுப்போம்.

 

முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. பெகாசஸ் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பெறுகிறார்களா? தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவரங்கள் பிரதமரிடம் சென்றால் அது குற்றச் செயலாகும்.

 

தேசத்தின் பிரதமர் மற்றொரு தேசத்துடன் கூட்டுச் சேர்ந்து, தலைமை நீதிபதி, முன்னாள் பிரதமர்கள் மற்றும் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட தனது சொந்த குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தினால், அது தேசத்தின் மீதான தாக்குதல்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.