ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
பின்னர் அவரை தங்கள் தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் அவரை சி.பி.ஐ. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் ப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி வழங்கி, திங்கள்கிழமை ஆஜர்படுத்துமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் சி.பி.ஐ காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ அதிகாரிகள் அவரை இன்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/okkk.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதேபோல் அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ப. சிதம்பரத்தை 26-ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அந்த மனு மீதான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் தொடர்பான இரு வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமா? என்பது இன்று மாலை உச்சநீதிமன்றம் வழங்கும் உத்தரவில் தெரிந்துவிடும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)