Patna Jharkhand passenger train incident

பீகாரில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலம் கியூல் ரயில் நிலையத்தில் பாட்னா - ஜார்கண்ட் பயணிகள் ரயில் ஒன்று நின்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரயிலின் மற்ற பெட்டிகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. தீ விபத்து ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ரயிலில்இருந்து வெளியே குதித்துத் தப்பியுள்ளனர்.

Advertisment

அதே சமயம் ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.