ADVERTISEMENT

கவர்ச்சி உடையில் தீபிகா படுகோன்; கொந்தளிக்கும் வலதுசாரிகள்!

06:46 PM Dec 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் 2023 ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ள 'பதான்' பான் இந்தியா திரைப்படத்தில் 'பேஷாராம் ரங்' என்ற முதல் பாடல் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. அப்பாடல் காட்சியில் தீபிகா படுகோன் நீச்சலுடையில் படுகவர்ச்சியாக நடித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் வைரலாக இன்னொருபுறம் பாடல் காட்சியில் இடம்பெற்ற அவரது உடை ஒன்றின் காவி நிறம் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதில், காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் அணிந்து தீபிகா படுகோன் நடித்திருப்பதுதான் சமூக வலைத்தளங்களில் இந்துத்வா ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுவருகிறது. இதில், அப்படத்தை மட்டும் எதிர்க்காமல், பாலிவுட் திரையுலகமே மிகவும் மோசம் என்பதாக, பதான் படத்தை மட்டுமல்லாமல், பாலிவுட் திரையுலகையே புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கிவருகிறார்கள்.

பாஜக, ராஷ்ட்ரிய சேவிகா சமிதி மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பினை பதிவுசெய்துவருகிறார்கள். 'காவி நிறம், துறவு, தியாகம், அறிவு, தூய்மை மற்றும் சேவை ஆகியவற்றின் சின்னமாகும். கராச்சி பாலிவுட் கூட்டம், காவி நிறத்தை கவர்ச்சியான நிறமாகக் காட்டி அவமதித்துள்ளார்கள்' என்றொருவர் ட்வீட் செய்துள்ளார். 'தீபிகா அணிந்துள்ள உடையின் நிறம், இந்து மதத்தின் தெய்வீக நிறத்தைக் கேலி செய்கிறது' என்று சிலர் ட்வீட் செய்துள்ளனர்.

இந்துக்களை அவமதிக்கும் இத்திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும், வி.எச்.பி. தலைவருமான டாக்டர் பிராச்சி சாத்வி ட்வீட் செய்துள்ளார். 'பாலிவுட்திரையுலகம், திரைப்படங்களை எதிர்மறையாகக்காட்டி விளம்பரப்படுத்துவதற்காக, கொச்சையான செயல்களைச் செய்கிறது. அந்த திரைப்படங்களைப் புறக்கணியுங்கள்' என்றொருவர் ட்வீட் செய்துள்ளார்.

'பேஷாராம் ரங் பாடலில் தீபிகாபடுகோன் காவி உடை அணிந்து, மலிவான அநாகரிக செயல்களில் ஈடுபடுகிறார். பாலிவுட் வேண்டுமென்றே இந்து மதத்தின் தெய்வீக நிறத்தை கேலி செய்கிறது. ஷாருக்கான் மட்டும் பச்சை நிற ஆடைகளை அணிந்துள்ளார். இது லவ் ஜிகாத்தின் மறைமுகச் செயல்போல இருக்கிறது' என்று ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக, வழக்கத்தைவிட 50 சதவீதம் கூடுதல் சம்பளமாக, 15 கோடி ரூபாய்வரை தீபிகா படுகோனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல நூறு கோடிகளைச் செலவழித்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு எழுந்துள்ள பிரச்சனையால் தயாரிப்பு நிறுவனம் முழி பிதுங்கியுள்ளது.

- தெ.சு.கவுதமன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT