The passengers were in for a shock as the plane landed

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் ஒன்று தரையிறங்கிய வேகத்தில் மீண்டும் மேலே எழும்பியது. இதனால் அதிலிருந்தபயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

Advertisment

சண்டிகரிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகா ஏர்லைன்ஸ் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் திங்கட்கிழமை இரவு 8.40 மணிக்கு தரையிறங்கியது.ஆனால், விமானம் தரையிறங்கியதும் மீண்டும் மேலே பறக்க ஆரம்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

இரவு 9:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம் முன்னரே தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே விமானம் தரையிறக்கப்படுவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் சிறிது நேரத்திற்குள் விமானத்தை பறக்கவிட்டு மீண்டும் சரியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விமானம் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment