மக்களவை தேர்தல் முடிவுகளில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கணிசமான இடங்களை பிடித்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் தொடர்ச்சியாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் பின்னடைவால், அதிருப்தியில் இருந்த, அக்கட்சி மூத்த தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் ஆறு மாதத்திற்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நீடிக்கும். அதாவது ஜூலை 3 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்.மாநிலங்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக கொண்டு வந்த மசோதாவிற்கு ஆதரவளித்ததால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாஜகவிற்கு மம்தா ஆதரவளித்திருப்பதன் மூலம், அக்கட்சி புது வியூகத்தை வகுத்துள்ளதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.