2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் நாடாளுமன்றம் வந்தனர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பேஅதிரடி காட்டும் அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனெனில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மத்திய நிதி அமைச்சர்கள் "சூட்கேசுடன்" வருகை தருவது வழக்கம். ஆனால் இந்த முறையை மாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் "சிவப்பு துணி உறைக்குள் ஆவணங்கள்" வைத்து நாடாளுமன்றத்திற்கு பட்ஜெட்டை கொண்டு வந்தார்.