Skip to main content

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இறந்த பின் சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

The parents married the idol after he died after protesting the love

 

காதலிக்கும் பொழுது திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டு காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவர்களது சிலைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

குஜராத் மாநிலம் தாபியில் கணேஷ் என்ற இளைஞனும் ரஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும் என காத்திருந்தனர். ஆனால் இறுதி வரை இரு தரப்பு பெற்றோர்களும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மனம் வாடிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 

இந்நிலையில் தற்பொழுது காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள் தான் காரணம் என வருந்திய குடும்பத்தினர் அவர்களது சிலைகளை தத்ரூபமாக செய்து அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தனர். உயிருடன் இருக்கும் பொழுது சேர்த்து வைக்காமல் இறந்த பிறகு சிலை செய்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.