Advertisment

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு அதிரடி பதில் கூறிய ரோஹித் சர்மா!

நேற்று கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 336 ரன்களை எடுத்தது.இதில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 140 ரன்கள் எடுத்தார். பின்பு விளையாடிய பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கனே சேர்த்தது. போட்டி நடைபெற்ற போது மழை வந்ததால் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Advertisment

india

அப்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ரோகித் சர்மாவிடம், ‘‘நீங்கள் சிறப்பாக விளையாடியதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகிறது. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனத்திற்குள்ளாக வருகிறார்கள். அவர்கள் விமர்சனத்தில் இருந்து வெளியே வந்து நன்றாக ஆட்டத்தை வெளிப்படுத்த நீங்கள் அட்வைஸ் கூறுவதாக இருந்தால், அது என்னவாக இருக்கும்?’’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா நான் எப்போதாவது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரானால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.

Rohit sharma icc worldcup 2019 match cricket Pakistan India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe