Advertisment

டெல்லியில் 6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்தது... நோயாளிகள் உயிருக்குப் போராட்டம்!

Oxygen depleted in 6 hospitals in Delhi ... Patients struggle for life!

இந்தியாவில் கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனாபரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Advertisment

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளமருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க்கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தற்போது டெல்லியில் 6 மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் உள்ள ஆறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரதி மருத்துவமனை, சாந்தோம் மருத்துவமனை, சாந்தி முகுந்த் மருத்துவமனையில் ஆக்சிஜன் தீர்ந்து விட்டது. அதேபோல் சரோஜ்சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீரத்ராம் ஷா மற்றும் யூ.கே. மருத்துவமனையிலும் முற்றிலும் ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

நாடுமுழுவதும்ஆக்சிஜன்பற்றாக்குறை நிலவிவரும் நிலையில்இன்றுமத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில்நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியைஉடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

hospital Delhi oxy99 corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe