Advertisment

மம்தா பானர்ஜி தலைமையில் பாஜக எதிர்ப்பு கட்சிகள் நாளை பிரமாண்ட பேரணி...

yhdf

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய, மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளன. இந்த பேரணியில் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பேரணி மூலம் மக்களவை தேர்தலுக்குக்கான கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு முயற்சியின்பேரில் இந்த மெகா கூட்டணி தற்போது அமைந்துள்ளது. நாளை கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

mamta banarji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe