ADVERTISEMENT

நாடாளுமன்றத்தில் மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

10:00 AM Dec 02, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காகக் காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், 12 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்தக் கோரிக்கையை அவர் ஏற்க மறுத்துவிட்டார். இந்தநிலையில், 12 உறுப்பினர்களின் இடைநீக்கத்தைத் திரும்பப் பெறக் கோரி நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தின் காந்தி சிலை முன்னர் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து நேற்றும் (01.12.2021) ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், இடைநீக்கம் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை உறுப்பினர்களும் காந்தி சிலை முன்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்காதவரை, அவர்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்படாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். இருப்பினும் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளனர்.

இந்தநிலையில் தற்போது, நாடாளுமன்றத்திலுள்ள காந்தி சிலை முன்னர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT