opposition leaders

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டெல்லியில் 14வது நாளாகமாபெரும்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.மேலும், நேற்றுவிவசாயிகளுக்கு ஆதரவாகமுழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து, விவசாயச் சட்டங்களைத்திரும்பப்பெறப்படவேண்டும் என வலியுறுத்தினர். இந்தச் சந்திப்பில், ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சீத்தாராம்யெச்சூரிஆகியோர்இடம்பெற்றிருந்தனர்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்தஎதிர்க்கட்சித் தலைவர்கள், பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ராகுல்காந்தி, விவசாயிகளுக்கு எதிரான இச்சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது மிகவும் முக்கியம் எனத் தெரிவித்தார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சீத்தாராம்யெச்சூரி, ஜனநாயகமற்ற முறையில், கொண்டுவரப்பட்டவேளாண் சட்டங்களும்,மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படவேண்டும் எனக்குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தியதாகக்கூறினார்.

தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத் பவார், வேளாண்மை மசோதா குறித்துஆழமானவிவாதம் நடத்தவேண்டும் எனவும், வேளாண்மை மசோதா, பாராளுமன்றத்தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்ததாகவும், ஆனால், அத்தனைகோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு, மசோதா வேகமாக நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தக் குளிரில்போராடும்விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்கவேண்டியது, அரசின்கடமைஎனத் தெரிவித்தார்.