நாடாளுமன்றத்தில் விவசாயிகள் தொடர்பான 3 மசோதாவிற்கு பா.ஜ.க கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் பதவியை தங்கள் கட்சியைச் சேர்ந்தஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்வார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,தற்பொழுது உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரானஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், விவசாயிகளுக்கு சகோதரியாகவும், மகளாகவும் துணை நிற்பதில் பெருமை அடைவதாகஹர்சிம்ரத் கவுர் பாதல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.