Skip to main content

அயோத்தி தீா்ப்பில் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக கருத்து -எம்எல்ஏ மீது வழக்குபதிவு செய்யக்கோரி புகாா்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

நாடு முமுவதும் பொிதும் எதிா்பாா்க்கப்பட்ட அயோத்தி தீா்ப்பு 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமா்வு வழங்கியது. இந்த தீா்ப்பு வெளியவதையொட்டி எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாதபடி நாடு முமுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் மத்திய அரசு தீா்ப்பு குறித்து செய்திகள் மற்றும் கருத்துகள் பாிமாறிகொள்வதில் சில கட்டுபாடுகளையும் ஊடகங்களுக்கு விதித்தியிருந்தது. அதேபோல் சமூக வலைத்தளங்களுக்கும் கடுமையான கட்டுபாடுகளை  விதித்திருந்தது.

 

bb


இதனால் தீா்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்திற்கு எதிரான கருத்துகளை பதிவிடுவதை அனைத்து தரப்பினரும் தவிா்த்தனா். இந்நிலையில் கேரளா மாநிலம் கொச்சியை சோ்ந்த இருவா் அயோத்தி தீா்ப்புக்கு எதிராக கருத்து தொிவித்ததால் அவா்கள் மீது கொச்சின் சென்ட்ரல் போலீசார் ஐபிசி 153A1, 330b, 120 ஆகிய பிாிவுகளில் வழக்குபதிவு செய்தனர். அயோத்தி தீா்ப்புக்கு எதிராக கருத்து தொிவித்ததால் வழக்குபதிவு செய்யப்பட்டதும் கேரளாவில் மட்டும் தான்.

 

bb


இந்தநிலையில் பாஜகவின் அங்கமான பாரதிய யுவ மோா்சா கேரளா மாநில தலைவா் பிரகாஷ்பாபு கேரளா டிஜிபி லோக்நாத் பெகராவை நோில் சந்தித்து ஒரு மனு கொடுத்தாா். அதில் எா்ணாகுளம் மாவட்டம் திருப்புனித்துற தொகுதி மா.கம்யூனிஸட் எம்எல்ஏ ஸ்வராஜ் அயோத்தி தீா்ப்பு குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் இன்றைய சூழலில் எதிா்ப்பு கருத்துகளை சொல்ல முடியாத  இந்த இந்தியாவில் இந்த தீா்ப்புக்கு மாற்றாக இன்னொரு தீா்ப்பு வரும் என்று மக்களாகிய நீங்கள் எதிா்பாா்த்தீா்களா? யாரும் அந்த மாதிாி ஒரு தீா்ப்பு வரும் என்று எதிா்பாா்த்தியிருக்க மாட்டீா்கள் என்பதுதான் உண்மை என்று மத பிரச்சனையை தூண்டும் விதமாக கருத்து தொிவித்திருக்கிறாா் என்றும், இதனால் ஏன் அவா் மீது வழக்கு பதிவு செய்யவில்லையென்றும் ஏற்கனவே இருவா் மீது வழக்குபதிவு செய்யப்பட்டியிருப்பதை சுட்டிக்காட்டி புகாா் கொடுத்தியிருக்கிறாா்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Headmaster gets 47 years in jail

சிவகங்கையில் பள்ளி சிறுமிகள் ஆறு பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ளது பெரிய நரிக்கோட்டை கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காளையார் கோவில் அண்ணா நகர்ப் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பள்ளியில் பயின்ற ஆறு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி ஒருவர் இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் அடிப்படையில் தலைமை ஆசிரியரை விசாரித்த பொழுது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கினை நடத்தி வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல கட்டங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சரத்ராஜ் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். தீர்ப்பில் ஆறு குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இந்த குற்றத்திற்கு அபராதத் தொகையாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆறு சிறுமிகளுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.