மேலும், அறுவைச் சிகிச்சை செய்யும் நபர் மருத்துவர் உடையில் இல்லாமல், காக்கி உடையில் இருப்பதும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் செல்போன் வெளிச்சத்தில் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்ற ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 நோயாளிகளுக்கு டார்ச் வெளிச்சத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.