கேரளாவில் உள்ள ஸ்டார் மீல்ஸ் என்ற உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு நான்கு இளைஞர்கள் மது அருந்த வந்துள்ளார்கள். அதனை தொடர்ந்து மது வகைகளை ஆர்டர் செய்து நால்வரும் குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் சர்வரிடம் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து ஊழியரும் பிரியாணியை எடுத்து வந்து அவர்களுக்கு பரிமாறியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
பிரியாணியை ருசித்து சாப்பிட்டு வந்த இளைஞரில் ஒருவர் சர்வரிடம் வெங்காயம் கேட்டுள்ளார். அப்போது சர்வர், வெங்காய விலை உயர்வு காரணமாக ஒருமுறைக்கு மேல் நாங்கள் யாருக்கும் வெங்காயம் தருவதில்லை என்று தெரிவித்துள்ளனர். இதை கேட்டு கோபமடைந்த நான்கு இளைஞர்களும் சர்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேசிக்கொண்டிருந்த அவர்கள் ஒருகட்டத்தில் சர்வரை அடிக்க துவங்கினர். மற்ற சர்வர்களும் இளைஞர்களை அடிக்க முயல, போதையின் உச்சத்தில் இருந்த இளைஞர்கள் கடையை அடித்து நொறுக்கினர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.