Skip to main content

ரூ. 13,000 கோடியை முதலீடு செய்யப்போகும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்...!

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அடுத்த ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட ரூ. 13,000 கோடியை அசாம் மாநிலத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஐந்த வருடத்தில் முதலீடு செய்த தொகையைவிட 30% அதிகமாக இம்முறை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ongc

 

வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பைப்லைன் மூலம் இணைப்பதற்கான பணியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம ஈடுபட்டுவருகிறது என்றும், இதுவரை ரூ. 6,000 கோடி இதில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 

நேற்று (வெள்ளிக்கிழமை) அசாம் மாநிலத்தில் ரூ.1,500 கோடிக்கு ஒன்பது ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று உண்ணாவிரத அறிவிப்பு வாபஸ்"- பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

"Withdrawal of the fast notice after taking the oath of the District Collector"- pR Pandian's announcement!

 

திருவாரூரில் பெரியக்குடி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கிணற்றை நிரந்தரமாக மூட அந்த நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள பெரியக்குடி பகுதியில் ஓஎன்ஜிசி கிணற்றில், கடந்த 2013- ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டதால், போராட்டத்திற்கு பின்னர், அந்த கிணறு மூடப்பட்டது. அந்த கிணறு மீண்டும் திறக்கப்படவிருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்த நிலையில், அந்த கிணற்றை முற்றிலுமாக மூடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மே மாதத்திற்குள் ஹைட்ரோ கார்பன் கிணற்றை முற்றிலுமாக மூடுவதற்கு ஓஎன்ஜிசி நிர்வாகம் ஒத்துக் கொண்டதாக தெரிவித்தார். 

 

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியையேற்று, சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். 

 

Next Story

எரிபொருள் குழாய் உடைந்து விவசாய நிலம் சேதம்!  

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

ONGC Damage to agricultural land due to broken pipe!

 

திருவாரூர் மாவட்டம், எருக்காட்டூர் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர். அதேநேரம் இந்தப்பகுதியைச் சுற்றிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கான குழாய்களும் குறுக்கும் நெடுக்குமாகப் பதித்துள்ளனர். அப்பகுதியில் விளைநிலங்கள் வழியாக குடும்பனார் கோயிலிலிருந்து வேளுக்குடி கிராமம் வரை எடுத்துச் செல்லப்படுகிறது.

 

இந்நிலையில் விவசாயி நடராஜன் என்பவரது நிலத்தின் வழியாகச் செல்லும் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி ஒரு ஏக்கர் அளவிற்கு விளைநிலம் முழுவதும் பரவி, அந்நிலம் பொட்டல் நிலமாக்கியுள்ளது. அதில் விதைக்கப்பட்டிருந்த பச்சை பயிர் மற்றும் உளுந்து பயிர்கள் முழுவதும் சேதமாகியுள்ளன. 

 

இதுகுறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் சேதமடைந்த விளைநிலத்தைப் பார்வையிட்டனர். அப்போது அந்தக் குழாய் ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமானது இல்லை எனக் கூறிவிட்டு அந்த எண்ணெய்யின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். வட்டாட்சியர் நடராஜன் நிலத்தை நேரடியாகச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

 

இதுதொடர்பாக விவசாயி கூறுகையில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் வகைகள் அனைத்தும் சேதமாகி உள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்கிறார்.