Skip to main content

ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் -நிர்மலா சீதாராமன் 

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
The one ration card one nation- scheme by August

 

20 லட்சம் கோடியில் தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு திட்டத்தின் முதல் கட்ட அறிவிப்புகளை நேற்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் இன்று இந்த திட்டத்திற்கான இரண்டாவது கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிட். புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 3 திட்டங்களும், தெருவோர வியாபாரிகளுக்கான ஒரு திட்டமும் இன்று அறிவிக்கப்படுகிறது. 3 கோடி சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் கடனை செலுத்துவதற்கான காலம் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் கிசான் கிரெடிட் கார்டுகள் அளிக்கப்பட்டுள்ளது.  இரண்டு திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படும். விவசாயிகளுக்கான திட்டங்கள் பின்னர் வெளியிடப்படும்.  விவசாயிகள் சிரமப்படாமல் இருக்கவே கடனை திரும்பச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 29 ஆயிரத்து 500 கோடி என்றார். 

 

 


கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட நிதி 4,200 கோடி. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்கவும், உணவு வழங்கவும் 11,002 கோடி. கரோனா காலத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு செய்யப்பட்ட செலவு பத்தாயிரம் கோடி. தொழிலாளர் ஈட்டுறுதி திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

சொந்த மாநிலம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தொழிலாளர்களை கண்டுபிடித்து புதிய பணிகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க ஒரு தேசிய அளவிலான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். 10 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் இஎஸ்ஐ வழங்குவது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆபத்தான பணிகளை செய்யும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விலையில்லா அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்றார்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவு தானியம் வழங்க 3500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி அல்லது கோதுமை 5 கிலோ ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் .ரேஷன் கார்டு இல்லாத தொழிலாளர்களுக்கும் விலையில்லா உணவு பொருட்கள் கிடைக்கும். மத்திய அரசின் இந்த  நடவடிக்கையால் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடைவார்கள். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 83% அமல்படுத்தப்படும் என்றார். 

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக 50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு ஐயாயிரம் கோடி கடன் உதவி வழங்கப்படும். சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 வரை  கடன் வழங்குவதற்கான சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.

 

 

 

70 ஆயிரம் கோடி புதிய மலிவுவிலை வீடு முதலீடுகள் செய்யப்படும். மலிவுவிலை வீடுகளை வாங்குவதற்கான வட்டி மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். மானியம் அளிப்பதால், 2.5 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.

மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. கிசான் கிரடிட் கார்டு திட்டத்தின் மூலம் 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். முத்ரா திட்டத்தின் வட்டிச்சலுகைக்காக செய்யப்பட உள்ள செலவு 1,500 கோடி ஆகும். விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க நபார்டு வங்கி மூலம் 30 ஆயிரம் கோடி. ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 6ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.