Advertisment

டெல்லி நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு!

rohini court

Advertisment

டெல்லியில் உள்ள ரோகிணி மாவட்ட நீதிமன்றத்தில், இன்று காலை மர்ம பொருள் ஒன்று வெடித்ததில்போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம பொருள் வெடித்ததில் நீதிமன்ற வளாக தரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்ற பணிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதலில் வெடித்தது லேப்டாப் என கருதப்பட்ட நிலையில், தற்போது வெடித்தது வெடிகுண்டுதான் என டெல்லி காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் ஐஇடி வெடிபொருள் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெல்லி காவல்துறை இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

court Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe