பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களைமருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் எடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் செகர்கொட்டா பகுதியில் வசித்து வரும் மனநலம் குன்றிய பெண் சங்கீதா, இவர் அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்ட திலிருந்து கொண்டை ஊசி, இரும்பு ஆணிகள் போன்றவற்றை விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதுபற்றியாருக்கும் தெரியாத நிலையில்
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணான சங்கீதாவை சமூக ஆர்வலர்கள் சிலர் கைப்பற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அப்பொழுது அந்த இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே செய்து பார்த்த பொழுது அவரது வயிற்றில் கொண்டை ஊசி, சேப்டிபின், இரும்பு ஆணிகள் போன்றவை இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.
உடனே அதை அகற்றுவதற்காக இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அவரது வயிற்றில் இருந்து சுமார்ஒன்றரை கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களான கொண்டை ஊசி சேப்டிபின், ஆணிகள் போன்றவை கைப்பற்றப்பட்டது. அதன்பின் சங்கீதா மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.