Advertisment

"ஓமிக்ரான்: கவனமாக செயல்பட வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்!

publive-image

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29/11/2021) காலை 11.00 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் கூறியதாவது, "அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும். மிக முக்கியமான கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். உருமாறிய ஓமிக்ரான் கரோனா தொடர்பாக நாம் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.

Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதிவரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Parliament PM NARENDRA MODI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe