இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு 'ஒமிக்ரான்'

'Omigron' for 21 people in India so far

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில், 'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மகாராஷ்டிரா-8, குஜராத்-1, டெல்லி-1 என இந்தியாவில் 'ஒமிக்ரான்' பாதிப்பு மொத்த எண்ணிக்கை 12 ஆக கண்டறியப்பட்ட நிலையில், தற்பொழுது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே நாளில் 9 பேருக்கு 'ஒமிக்ரான்' தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இன்று (5/12/2021) இரவு 8.25 மணி நிலவரப்படி இதுவரை 'ஒமிக்ரான்'' வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

India Maharashtra OMICRON Rajasthan
இதையும் படியுங்கள்
Subscribe