இந்தியாவில் பல மாநிலங்களில்கரோனாகட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ள நிலையில் அண்மையில் அனைத்துநாடுகளுக்கான விமான சேவையை இந்திய அரசு தொடங்கியிருந்தது. இந்நிலையில் மும்பையில் ஒருவருக்கு ஒமைக்ரான்XE என்ற புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தகவலைமும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமைக்ரான்XE என்ற புதிய வகை கரோனா தொற்று 10 மடங்கு வேகமாக பரவும் வைரஸ் என்றும், சீனாவில் இந்த புதிய வகை தொற்று பாதிப்பு இருந்த நிலையில் இந்தியாவில் முதன்முறையாக ஒமைக்ரான்XE உறுதி செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.ஒமைக்ரான்XE தொற்று முதலில் பிரிட்டன் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன்பரவல் சீனாவிலேயே அதிகம் இருந்தது. இதனால் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும்நிலையில் மகாராஷ்டிராவில் மும்பை நகரில் ஒமைக்ரான்XE உறுதி செய்யப்பட்டிருப்பதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.