Skip to main content

வாரிசால் பயனில்லை; துணிவான முடிவை எடுத்த முதியவர் - அதிர்ந்துபோன அரசு

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

old man has written off property worth Rs 1.5 crore to the government

 

உத்தரப்பிரதேசத்தில் பெற்ற பிள்ளைகள் தன்னைக் கைவிட்டதாகக் கூறி தன்னுடைய ரூ. 1.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை அரசுக்கு எழுதி வைத்த முதியவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாதுசிங். இவருக்கு நான்கு மகளும் ஒரு மகனும் உள்ளனர். மகள்கள் நான்கு பேருக்கும் திருமணமாகி, அவர்களது கணவர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். மகனுக்கு இன்னும் திருமணமாகாத சூழலில் சகரான்பூரில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாதுசிங் மனைவி இறந்ததைத் தொடர்ந்து அவர் மட்டும் முசாஃபர்நகரில் தனியாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில், நாதுசிங்கின் பிள்ளைகள் அவரை முசாஃபர்நகர் வீட்டிலிருந்து முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். ஐந்து பிள்ளைகள் இருந்தும் ஒருவர் கூட தன்னைப் பார்த்துக்கொள்ளாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்ததால் மனமுடைந்த நாதுசிங் தனது பெயரில் உள்ள ரூ. 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை உத்தரப்பிரதேச அரசுக்கு உயில் எழுதி வைத்துள்ளார். மேலும் அந்த உயிலில், தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசு மருத்துவமனை அல்லது பள்ளிக்கூடம் கட்டிக்கொள்ளலாம் என்றும், எனது மரணத்திற்குப் பிறகு எனது உடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காகத் தானமாகக் கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து நாதுசிங் விருப்பப்படியே அவரது இடத்தில் பள்ளி அல்லது மருத்துவமனை கட்டப்படும் என்றும், அதற்காக அவரது மரணத்திற்குப் பிறகு அரசு நிலத்தை எடுத்துக்கொள்ளும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.