Skip to main content

அன்னதானத்துக்கு 8 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

ஆந்திராவில் முதியவர் ஒருவர் பிச்சை எடுத்த பணத்தில் 8 லட்சம் நன்கொடை வழங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் காரியப்பன். இவர் அப்பகுதியில் 40 ஆண்டுக்காலமாக ஆட்டோ ரிக்ஷா ஓட்டிவந்துள்ளார். தற்போது 75 வயது ஆன நிலையில், வயது முதிர்வின் காரணமாக பிச்சை எடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலில் அன்னதான திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இதற்காக அப்பகுதி இளைஞர்கள் அந்த பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து வந்தார்கள். அப்போது காரியப்பனை கடந்து சென்ற இளைஞர்களை கூப்பிட்ட அவர், ஏன் என்னிடம் பணம் கேட்கவில்லை என்று கேட்டுள்ளார், அதற்கு நீங்களே கஷ்டப்படுகிறீர்கள், உங்களிடம் எப்படி கேட்பது என்று இளைஞர்கள் பதிலளித்துள்ளார்கள். ஆனால் சிரித்தவாறே என்னிடம் பணம் இருக்கிறது என்று கூறிய அவர், பையில் வைத்திருந்த 8 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Attack on students engaged in prayer; A viral video

அண்மையில் டெல்லியில் சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்தை பெற்று வருகிறது. குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story

கார் ஓட்டுநரை தாக்கிய லாரி ஓட்டுநர்; கதறி அழுத மனைவி

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Lorry driver hits car driver; A crying wife

 

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள ரேடியல் சாலையில் கார் ஒன்றின் மீது லாரி மோதிய சம்பவத்தில் கார் ஓட்டுநருக்கும் லாரி ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், லாரி ஓட்டுநர் கார் ஓட்டுநரை அவருடைய மனைவி முன்பே தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

ரேடியல் சாலையில் லாரி மோதியதில் கார் சேதமடைந்தது. இதனால் கார் ஓட்டுநர் லாரி ஓட்டுநரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அப்பொழுது லாரி ஓட்டுநர் அலட்சியமாக பதில் சொன்னதாலும், ஆபாசமாக பேசியதாலும் லாரியின் சாவியை கார் ஓட்டுநர் எடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் வந்த நபரின் மனைவி முன்பே லாரி ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. காரில் வந்த நபரின் மனைவி கதறி அழுது கூச்சலிட்ட நிலையிலும் அவர் மீது தாக்குதல் தொடர்ந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பல்லாவரம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.