Okinawa announces recall and repair of electric scooters

ஒகினாவா நிறுவனம், தான் விற்பனை செய்த 3,215 மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரும்பப்பெற்று, சரி செய்து தர உள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

மின்சார வாகனங்கள் தீப்பிடிக்கும் நிகழ்வுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. வேலூர் அருகே இரு வாரங்களுக்கு முன் ஒகினாவா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி தீப்பிடித்ததில் தந்தையும், மகளும் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்நிகழ்வு குறித்து, ஒகினாவா நிறுவனம் ஆய்வுகளை நடத்தியது. இதைத் தொடர்ந்து, 3,215 ஸ்கூட்டர்களைத் திரும்பப் பெற்று சரி செய்து தரப்போவதாக, ஒகினாவா தெரிவித்துள்ளது.

Advertisment

வாகனத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் இதை இலவசமாக சரி செய்து தரப்போவதாக ஒகினாவா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்நடவடிக்கை மேற்கொள்வதாக ஒகினாவா தெரிவித்துள்ளது.

முன்னதாக, தீப்பிடித்த புகாருக்கு ஆளான மின்சார வாகனங்களின் தயாரிப்பு நிறுவனங்கள், குறிப்பிட்ட தொகுப்பில் உற்பத்திச் செய்யப்பட்டதைத் திரும்பப் பெற்று சரி செய்து தருமாறு நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் வலியுறுத்தியிருந்தார்.

Advertisment