Skip to main content

எரிபொருள் குழாய் ஏற்படுத்திய விபரீதம்... மூன்று நாட்களாக தீப்பிடித்து எரியும் நதி...

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

சுமார் 380 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.

 

oil india limited pipeline causes fire in Burhi Dihing River

 

 

அசாம் மாநிலத்தின் மிகமுக்கிய நீராதாரங்களில் ஒன்றான புர்ஹி திஹிங் நதி, பிரம்மபுத்திரா நதியிலிருந்து உருவாகி அசாம் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து அம்மாநில விவசாய தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் இந்த நதியில் எரிபொருள் கலந்ததால் கடந்த மூன்று நாட்களாக தீப்பிடித்து எரிந்து வருகிறது.

அசாம் மாநிலத்தின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சசோனி கிராமத்திற்கு அருகில் இந்திய அரசுக்கு சொந்தமான 'ஆயில் இந்தியா' எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நதியில் கச்சா எண்ணெய் கலந்துள்ளது. இந்த எண்ணெய் தீப்பிடித்து கடந்த மூன்று நாட்களாக எரிந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  

மூன்று நாட்களுக்கு முன்பே ஆற்றில் ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த கிராமவாசிகள் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், இதுவரை அதனை அணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படும் இந்த நதியில் கச்சா எண்ணெய் கலந்து தீப்பிடித்து எரிந்து வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஓட்டலில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறி தப்பித்த வாடிக்கையாளர்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் -  அருப்புக்கோட்டை பஜார் பகுதியில்,  இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது.  இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அங்கிருந்து தீ பரவி,  மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும்,  உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்  தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள்,  சேர்கள்  ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா?  இல்லை வேறு ஏதேனும் காரணமா?  என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.