Skip to main content

“எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது” - சபாநாயகர் செல்வம் பேட்டி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ நேரு குற்றம் சாட்டி வந்தார். தனது தொகுதியில் நடைபெறும் அண்ணா திடல் மேம்பாட்டு பணி ஓராண்டுக்குள் முடித்திருக்க வேண்டும். இரண்டரை ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதோடு தரமில்லாமல் பணிகள் நடந்து வருகிறது. தொகுதிக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகளை தொடங்கவில்லை என்றும் புகார் கூறியிருந்தார்.

 

இதை கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டம் நடத்தினார். ஆனால் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா அரசு விழாவில் பங்கேற்றிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரு எம்.எல்.ஏ தனது ஆதரவாளர்கள், சமூக நல அமைப்பினரோடு அரசு விழா நடந்த கம்பன் கலையரங்கிற்கு சென்றார். நேரு எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்ததை தொடர்ந்து கம்பன் கலையரங்கின் 2 நுழைவு வாயில்களையும் போலீசார் மூடினர். அங்கு வந்த எம்.எல்.ஏ, அவரின் ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ கேட் மீறி ஏறி குதித்து கம்பன் கலையரங்கில் உள்ளே சென்றார்.

 

அங்கு உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்து கொண்டிருந்தது. விழா மேடைக்கு கீழே நின்று தலைமை செயலர் மற்றும் அதிகாரிகளை பார்த்து சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார். மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மா ஆகியோரும் இருந்தனர்.

 

இதனால் அரசு விழா சில நிமிடங்கள் தடைபட்டது. அதன் பின்னர் நேரு, விழாவில் முதல் அமைச்சர் பேச்சுக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என கூறி வெளியேறினார். இந்த நிலையில் எம்.எல்.ஏ வரும் தகவல் கிடைத்தும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை என புகார் எழுந்தது. அதோடு அரசு விழாவுக்கு வந்த எம்.எல்.ஏவை தடுப்பதா என்ற கேள்வியும் எழுந்தது. அவரை மட்டும் அனுமதித்து ஆதரவாளர்களை தடுத்திருக்கலாம் என கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்பன் கலையரங்கில் பாதுகாப்பு பணியிலிருந்த ஓதியஞ்சாலை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது பொறுப்பை உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாபுஜி கூடுதலாக கவனிப்பார் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இதனிடையே அரசு விழாவில் மூடிய கதவை ஏறி குதித்து உள்ளே சென்று வாக்குவாதம் செய்த சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இதனிடையே ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், கம்பன் கலையரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்  கதவை ஏறி குதித்த விவகாரம் போன்றவை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம் அவசர ஆலோசனை நடத்தினார். ADGP ஆனந்தமோகன், எஸ்.பிக்கள் மாறன், செல்வம், சுவாதி சிங், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார், அங்காளன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், சந்திர.பிரியங்கா மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

 

Officials' refusal to meet MLAs is reprehensible - Speaker Selvam Peti

 

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் செல்வம், “கோரிக்கைகளை வலியுறுத்தி சந்திக்க செல்லும் எம்.எல்.ஏக்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் எம்.எல்.ஏக்களுக்குரிய மரியாதையை அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன். மீறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 

மேலும் நேற்றைய நிகழ்வுக்கு முதல்வருடன் பேசி சுமூக நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் அதிகாரியின் சஸ்பெண்ட்டை நீக்கவும், எம்.எல்.ஏ மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவும் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். மேலும் முதல்வரின் கருணை உள்ளதால் தான் தவறு செய்யும் அதிகாரிகள் தப்பி வந்தனர். தேவைப்பட்டால் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.