Advertisment

ஒடிசா ரயில் விபத்து; ரயில்வே அமைச்சக அறிக்கை வெளியீடு

Odisha train incident Ministry of Railways report release

Advertisment

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி சரக்கு ரயிலுடன் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய பெரும் விபத்து நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தத்துயர சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே சமயம் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலும் விசாரணை நடந்தது. அந்த விசாரணை அறிக்கையில், பாகநாகாவில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு மனிதத்தவறே முக்கியக் காரணமாகும். மேலும் தவறாக சிக்னல் கொடுத்ததன் விளைவாகத் தான் இந்த விபத்து நடந்ததாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியிருந்தது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை செய்து வந்த நிலையில், மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைச்சகம் முதல் முறையாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வடக்கு கூம்டி ரயில் நிலையத்தில் சிக்னல் மாற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து நேரிட்டதாகவும், எலக்ட்ரிக் லிப்டில் பேரியரை மாற்றும் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடும் இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe