Skip to main content

ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020


ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. 

 

odisha government had decide corona curfew extend till April  30th


இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, கரோனா பரவலைத் தடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள், முன்னாள் குடியரசுத்தலைவர்கள், மாநில முதல்வர்கள், வல்லுநர்கள் உள்ளிட்டோர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து தரப்பினரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் கூறுகின்றன. 

இந்த நிலையில் நாளை மறுநாள் (11.04.2020) காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் பிரதமர் ஆலோசனை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 

odisha government had decide corona curfew extend till April  30th


இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

http://onelink.to/nknapp


இந்த நிலையில் ஒடிஷா மாநிலத்தில் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 

odisha government had decide corona curfew extend till April  30th


மேலும் ஒடிஷா மாநிலத்தில் ஜூன் 17- ஆம் தேதி வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ள நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அதேபோல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை ரயில், விமான சேவையை நீட்டிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு ஒடிஷா முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை முதல் மாநிலமாக ஏப்ரல் 30- ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது ஒடிஷா அரசு என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

Sonia Gandhi is infected with Corona for the second time!

 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு இரண்டாவது முறையாக, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 

 

இது தொடர்பாக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசின் நெறிமுறைகளின் படி, சோனியா காந்தி தனிமைப்படுத்துதலில் உள்ளார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

கடந்த மூன்று மாதங்களில் அவர் இரண்டாவது முறையாக, கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து கவலைத் தெரிவித்திருக்கும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

 

அவரது உடல் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்வுக்கும் பிரார்த்திப்பதாக கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

ஏற்கனவே, பிரியங்கா காந்திக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில், சோனியா காந்திக்கும் மீண்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.