Advertisment

குழந்தைக்கு புயலின் பெயர்: அடேங்கப்பா காரணம் சொன்ன குழந்தையின் அம்மா!

hjk

Advertisment

புதிதாக பிறந்த குழந்தை ஒன்றுக்கு அவருடைய அம்மா புயலின் பெயரை சூட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் குலாப் புயல் உருவாகி, ஒடிசா அருகே கரையைக் கடந்தது. பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இதனால் கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. அடிக்கடி புயல் பாதிப்பு ஏற்படுவதால், தாங்கள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக குலாப் புயல் பெரிய பாதிப்பைஏற்படுத்துவதிலிருந்துதடுக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்திருந்தது.

புயல் பாதிப்பு ஒருபுறம் இருந்துவரும் நிலையில், இந்தப் புயல் நேரத்தில் பிறந்த குழந்தை ஒன்றுக்கு குலாப் என்று அவர்களின் பெற்றோர் பெயர் வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்த தினத்தை அனைவரும் நினைவில் வைக்க தாங்கள் இந்த பெயரை வைத்ததாக அந்தக் குழந்தையின் அம்மா விளக்கமளித்துள்ளார். குழந்தைகக்குப் புயலின் பெயரை வைத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குலாப் என்றால் இந்தி மொழில் ரோஜா என்று பெயர். மேலும், இந்தப் புயலுக்கு குலாப் என்ற பெயரை பாகிஸ்தான் அரசு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

cyclone Baby girl
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe