Skip to main content

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
new cji ramana

 

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் எஸ்.ஏ.போப்டே. இவரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியோடு நிறைவடைகிறது.  இதனையடுத்து எஸ்.ஏ.போப்டே, அடுத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா என்பவரை சமீபத்தில் பரிந்துரைத்தார். 

 

இந்தநிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி. ரமணாவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நியமித்துள்ளார். அவர் வரும் 24 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் வரும் ஏப்ரல் 24 முதல், அடுத்த ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு (ஆகஸ்ட் 26, 2022 வரை) என்.வி. ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ - ராம்நாத் கோவிந்த் ஆலோசனை

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

One country one election Ram Nath Kovind meeting

 

பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட உறுப்பினர்களை நியமித்து அண்மையில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம்நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதே சமயம் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

 

இந்நிலையில் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 23) ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள ஜோத்பூர் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குலாம் நபி ஆசாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த பூர்வாங்க நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

"மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ; இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி..." - வழக்கறிஞர் பாலு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

க

 

சமீபத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் உடைத்துக்காட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவெடுத்திருக்கின்றது. அதைத் தற்போது அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். அதை நீதிமன்றம் தற்போது வழிமொழிந்திருக்கிறது. 

 

சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியா 56 சமஸ்தானங்களாக, அதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த இடத்திற்கு தற்போது அவர்கள் நம்மை எல்லாம் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் பெரும்பான்மை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் பல குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. இதில்  மூன்று நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். 

 

இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித். அவரும் ரவீந்திர பட் அவர்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் பார்வையே வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி என்று இந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மொத்தமாக வைக்கப்பட்ட அநீதியின் வடிவமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது. 

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சாதிய அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு இந்தப் பொருளாதார ரீதியிலாகக் கொடுக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீடு என்பது அதை அடியோடு சமாதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது படிப்படியாக இட ஒதுக்கீடு எதற்காக இந்த அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் அடிப்படை தத்துவத்தையே அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் அந்தக் கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களுடைய தீர்ப்பில் கூட அதை மிகத் தெளிவாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற நடைமுறையே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை இருவருமே மிகவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது மிகவும் முக்கியமானது. 

 

மற்ற மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தியாவில் 80 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் பலமாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் உயர் சாதியினருக்கு மட்டும் இந்த இட ஒதுக்கீடு என்பது அவர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். இதைத் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புகளில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். இதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்ற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ஐயம் தீர்ப்பு வழங்கிய அந்த இரண்டு நீதிபதிகளுக்கு இருந்திருக்கிறது. தற்போது பெரும்பான்மை நீதிபதிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு கூட இதை விசாரிக்க வாய்ப்பு ஏற்படும். அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பு என்பது சமூகநீதியை விரும்பும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.