இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

covid 19

இங்கிலாந்தில் பரவிவந்தமரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத்தொங்கியுள்ளது. ஏற்கனவே இத்தாலி, ஃப்ரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில்புதியவகை கரோனாதொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே 25 பேருக்கு புதியவகை கரோனாதொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 13 பேருக்குபுதியவகை கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்,இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம்மற்றும் குடும்ப நலத்துறைஅமைச்சகம், "புதியவகை கரோனாதொற்றால்பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சையளிக்கப்டுகிறது. மேலும், அவர்களோடுநெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்இருந்தகுடும்பத்தினர், சக பயணிகள் உள்ளிட்டோரை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது" எனஅறிவித்துள்ளது.

corona virus covid 19 India united kingdom
இதையும் படியுங்கள்
Subscribe