தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (NPR-'NATIONAL POPULATION REGISTER') எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்பிஆர், சிஏஏவுக்கு எதிராக ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன.
அந்த வரிசையில் டெல்லி மாநில அரசும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் என்பிஆர் அமல்படுத்தக்கூடாது எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும் என்பிஆர் மற்றும் என்ஆர்சி .யை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.