Skip to main content

'இனி வெள்ளை நிறம் மட்டும்தான்...'- செக் வைத்த கேரள அரசு

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 'Now only white color...'- Kerala government put a check

 

அண்மையில் கேரளாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து கேரள அரசின் போக்குவரத்து நெறிமுறைகளையே மாற்றவைத்துள்ளது.

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கடந்த 6ஆம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர். பேருந்தில் 43 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், 2 ஊழியர்கள் என மொத்தம் 50 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து நள்ளிரவு பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது கொட்டாரக்கரையில் இருந்து கோவை நோக்கி சென்ற கேரள அரசுப் பேருந்தின் மீது மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்து மோதியது. இதில் நிலை தடுமாறி சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 மாணவ மாணவிகள் உயிரிழந்தனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

இந்த விபத்து சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பே சம்பந்த ஓட்டுநர், பேருந்தில் ஒலிபரப்பான பாடலுக்கு ஓட்டுநர் இருக்கையில் இருந்து எழுந்து ஆடிக் கொண்டே பேருந்தை இயக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இப்படிப்பட்ட அலட்சியங்கள் காரணமாக நிகழ்ந்த இந்த விபத்து கேரளாவின் போக்குவரத்து நெறிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வைத்துள்ளது.

 

kerala

 

இதனால் கேரள அரசு தனியார் சுற்றுலா பேருந்துகளுக்கு பல்வேறு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி தனியார் சுற்றுலா பேருந்துகள் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும், சவுண்ட் சிஸ்டம், லேசர் விளக்குகள் பேருந்தில் இருக்கக்கூடாது என நெறிமுறைகளை வகுத்துள்ளது. கேரளா முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் சுற்றுலா பேருந்துகள் இருக்கும் நிலையில், அவை அனைத்தும் வெள்ளை நிறத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் சஜீவ் என்பவர் தன்னுடைய பேருந்திற்கு தனது கையாலேயே வெள்ளை நிறம் அடித்து வருகிறார். மேலும் இதுகுறித்து கூறுகையில், 'கரோனா பாதிப்புக்கு பிறகு இப்பொழுதுதான் வாழ்க்கை சீராகியுள்ளது. அதற்கிடையே அரசின் இந்த நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. யாரோ செய்த தவறுக்கு நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.