Skip to main content

இனி சீன நிறுவனத்திடம் எதுவும் வாங்கப்பட மாட்டாது-ஐ.எம்.ஆர்.சி அறிவிப்பு!!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

Nothing will be bought from Chinese company anymore - IMRC announcement !!

 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தரமற்ற ரேபிட் டெஸ்ட் கருவிகளை தந்த சீன நிறுவனத்திடம் இனி எந்த பொருட்களும் வாங்கப்பட மாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து கடந்த வாரம் கரோனாவை உடனடியாக பரிசோதனை செய்து அறிந்துகொள்ள ரேபிட் டெஸ்ட் கருவிகள் லட்ச கணக்கில் ஆர்டர் செய்து சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டு நாடு முழுவதும் பல இடங்களுக்கு  அனுப்பிவைக்கப்பட்டன.

இப்படி  அனுப்பிவைக்கப்பட்ட இந்த  ரேபிட் டெஸ்ட் கருவிகள் முறையாக செயல்படவில்லை, முடிவுகள் தவறாக வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்துவதை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்க அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தரமற்ற ரேபிட் டெஸ்ட் கருவிகளை அனுப்பிய சீன நிறுவனத்திடம் இனி எந்த பொருட்களும் வாங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.  

சார்ந்த செய்திகள்