கடந்த ஆண்டு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தபோது,இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியாக இருக்கும் காஷ்மீர் தீப்பற்றி எரிந்தது.ஊரடங்கு உத்தரவு, செல்போன் சேவை ரத்து, இணைய சேவை துண்டிப்பு,பள்ளிக்கூடம் மூடல் என அந்த மாநிலமே அல்லோலகல்லோலப்பட்டது. தற்போது, அதற்கு சற்றும் குறைவில்லாமல் கொதிநிலையில் இருக்கிறதுடெல்லி மாநகரம்.
மத்திய அரசின் சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஷாகின்பாக்பகுதியில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பிப். 19-ம் தேதி வாரணாசியில் உரை நிகழ்த்திய மோடி, குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகதெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், பிப். 23-ம் தேதி டெல்லி பஜன்புரா பகுதியில் சிஏஏ ஆதரவாளர்கள்போராட்டம் நடத்தினர். அப்போது, சிஏஏ ஆதரவாளர்களுக்கும்எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் கற்களால்தாக்கிக்கொண்டனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும்இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அதனைத் தொடர்ந்து,போலீஸார் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
நிலைமை மெல்ல கட்டுக்குள் வந்த நிலையில், மறுநாள் பிப். 24-ம் தேதி மீண்டும்போராட்ட களத்தில் வன்முறை ஏற்பட்டது. ரத்தன்லால் என்ற போலீஸ்காரர்கல்வீச்சு சம்பவத்தில் உயிரிழக்க, காவல் துணை ஆணையர் ஒருவர்காயமடைந்தார். இதையடுத்து, லத்திசார்ஜ், கண்ணீர்புகை குண்டுகளை வீசிகலவரக்கும்பலை விரட்டி அடித்தது டெல்லி போலீஸ். சேதி கேட்டுஅகமதாபாத்தில் இருந்து டெல்லி விரைந்தார் பிரதமர் நரேந்திரமோடி.
இதற்கிடையே அகமதாபாத் - ஆக்ரா பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கஅதிபர் டிரம்பும் டெல்லி வந்து சேர்ந்ததால், ஒரு வித பரபரப்பு தொற்றிக்கொண்டது. பிப். 25-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு,காந்தி சமாதியில் அஞ்சலி, ஐதராபாத் இல்லத்தில் மோடியுடன் முக்கியபேச்சுவார்த்தை, தொழில் துறையினருடன் ஆலோசனை என ‘ஷெட்யூல்’ பிரகாரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறுபுறம், வடகிழக்கு டெல்லியான கர்தாம்பூரி, ஜாப்ராபாத், சாந்த் பாக், மாஜ்பூர்,ஷீலாம்பூர் பகுதிகள் கலவரக்காடாக மாறின. வாகனங்களுக்கு தீ வைப்பு, பொதுச்சொத்துக்கள் சேதம், வழிபாட்டு மையங்கள் மீது தாக்குதல் என கலவர பூமியாகமாறியது. இதனால் 6 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இருப்பினும், அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகளால் புதன்கிழமை முற்பகல்நிலவரப்படி பலி எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துவிட்டது. பத்திரிகையாளர்கள்,போலீஸ்காரர்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஷீலாம்பூர் காவல் துணைஆணையரிடம் ஆலோசனை நடத்தினார். டெல்லியின் சிறப்பு காவல்ஆணையராக ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எந்த பலனும்இல்லை. இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகும் 7 பேர் கலவரத்தில்கொல்லப்பட்டுள்ளனர்.
பூட்டியிருந்த கடைகளை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை அள்ளிச் சென்றகலவரக் கும்பல் அதனைப் படம் பிடித்த பத்திரிகையாளர்களையும் விரட்டிவிரட்டித் தாக்கியதாக, டெல்லியில் உள்ளபத்திரிகை நண்பர்கள்நம்மிடம் தெரிவித்தனர்.
25-ம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால், "பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்தார். பின்னர் அவரே நிலைமை எல்லைமீறிப்போய்விட்டது. டெல்லி போலீஸால் கலவரத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. ராணுவத்தை அனுப்பி வையுங்கள்" என்று உள்துறைஅமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
ஆனால், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து ஒரு வேண்டுகோள்கூட விடுக்கவில்லை. ‘மக்களே! அமைதியாகஇருங்கள், வன்முறையில் ஈடுபடாதீர்கள்.’ என்று ஒரு வார்த்தைகூட இந்தநிமிடம் வரை சொல்லவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா காவல்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு சரி.
இதற்கிடையே, புதன்கிழமை காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில்நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி,மன்மோகன்சிங், மாஜி மந்திரிகள் ஏ.கே.அந்தோனி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டநிர்வாகிகள் கலந்து கொண்டு, இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்து மவுனஅஞ்சலி செலுத்தினர். ராகுல்காந்தி ஏனோ ஆப்செண்ட்.
இதற்கிடையே, டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்தஉச்சநீதிமன்றம், கலவரத்தைக் கட்டுப்படுத்த டெல்லி போலீஸ் தவறிவிட்டதாகநறுக்கென்று தலையில் 'குட்டு' வைத்துள்ளது.