Advertisment

நோக்கியா அறிமுகம் செய்யும் புதிய வாழைப்பழம் கைபேசி..!

நோக்கியா மொபைல் புதிதாக தனது இரண்டு மாடல்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு மாடல் அக்டோபர் 23-ஆம் தேதியும் மற்றொரு மாடல் அக்டோபர் 11-ஆம் தேதியும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.

Advertisment

nn

முதலில் அக்டோபர் 11-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 3.1 பிளஸ் அடுத்தது அக்டோபர் 23-ஆம் தேதி வரவிருப்பது நோக்கியா 8110. இதில் நோக்கியா 3.1 பிளஸ் இந்த தலைமுறைக்கு ஏற்றதுபோல் ஆண்ட்ராய்டு 8.1, டச் ஸ்க்ரீன், பின் பக்க கேமரா 13 எம்பி மற்றும் 5 எம்பி, 8 எம்பி செல்ஃபீ கேமரா என்றும் இருக்கிறது. ஆனால், இந்த நோக்கியா 8110 முற்றிலும் வேறு, இது 1990-களில் பிறந்தவர்களுக்கானது என்றே சொல்லலாம். காரணம், இந்த மாடலில் வெறும் 2.4 இன்ச் டிஸ்பிலே, 2 எம்பி பின்பக்க கேமரா என்று இருக்கிறது. அதேசமயம் இந்த போனில் கூகுள் மேப், பேஸ்புக் போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 5,999 என்றும் 3.1 பிளஸ் ஃபோனின் விலை ரூ. 11,499 என்றும் நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இது எல்லாவற்றையும்விட சிறப்பு, நோக்கியா 8110 மாடலின் பெயர் 'பனானா மொபைல்' அதாவது தமிழில் வாழைப்பழம் கைபேசி. இதற்கு காரணம் 8110 மாடல் பார்ப்பதற்கு வாழைப்பழம் போன்றே இருக்கும்.

android nokia mobile
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe